தன்னை பலாத்காரம் செய்தவரின் 5 வயது மகனின் தலையை துண்டித்த 13 வயது சிறுமி
லக்னோ: உத்தர பிரததேச மாநிலத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் 5 வயது மகனின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார் 13 வயது சிறுமி ஒருவர்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள கைர் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு. அவரது மகன் அமித்(5). கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அமித்தை அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி நைசாகப் பேசி ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தலையை துண்டித்து கொலை செய்தார்.

பின்னர் சிறுவனின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தீ வைத்தார். மறுநாள் காலை சிறுவனின் பாதி எரிந்த உடலை நாய் இழுத்துச் சென்றபோது தான் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சிறுவன் கடைசியாக அந்த சிறுமியுடன் காணப்பட்டதால் போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமி கூறியதாவது,
அமித்தின் தந்தை ரிங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை பழிவாங்கவே அவரின் மகனை கொலை செய்தேன் என்றார்.
இதையடுத்து போலீசார் சிறுமியை கொலை வழக்கிலும், ரிங்குவை பலாத்கார வழக்கிலும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications