ஹிமாச்சல பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி; 25 பேர் படுகாயம்
சம்பா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் படுகாயமடைந்தனர்.
ஹிமாச்சல பிரதேசம், சம்பா மாவட்டத்தில் உள்ள நூல்லா என்ற இடத்தில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் சாங்கினியில் இருந்து சம்பா டல்ஹெளசி நோக்கி 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சம்பா மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் காயமடைந்த 25க்கும் அதிகமானோர் அருகில் உள்ள பத்ரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயரிழந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக பத்தாயிரம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications