ஒடிஷா- சத்தீஸ்கர் எல்லையில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
மல்காங்கிரி: ஒடிஷா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒடிஷா- சத்தீஸ்கர் மாநில எல்லையான மல்காங்கிரி மாவட்டத்தில் நேற்று இரவு போலீசாரும் சிறப்பு நடவடிக்கைக்கான படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது மல்காங்கிரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், படையினர் மீது திடீர் என துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெருமளவிலான வெடிபொருட்கள், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications