இந்தியாவில் கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து - கடற்படை தளபதி எச்சரிக்கை
டெல்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் 140 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படுவதால் கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து உள்ளதாக கடற்படை தளபதி ஜோஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடற்படை தினத்தையொட்டி கடற்படை தளபதி டி.கே.ஜோஷி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வணிகக்கப்பல்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பயணம் செய்கின்றனர். இவர்களில் பலரும் இந்திய கடல் பகுதிக்குள் நுழைகின்றனர். இது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இத்தகைய கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்தும் உள்ளது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் வந்து தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில் இப்படிப்பட்ட ஆயுதம்தாங்கிய காவலர்களின் நடமாட்டம், மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இவர்களுக்கு கடிவாளம் போடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று சர்வதேச கடல்சார் அமைப்பிடம் இந்திய கடற்படை வலியுறுத்தி உள்ளது.இந்தக் கப்பல்களில் எல்லாம் சோதிக்கப்படாத ஆயுதம் தாங்கிய காவலர்கள் இருக்கிறார்கள். இந்தக் கப்பல்களும் இந்திய கடலோரப் பகுதிக்கு அருகே நடமாடுகின்றன. இந்தக் கப்பல்களில் வீரர்களும் வந்ததைக் காண முடிந்துள்ளது.
இந்தக் கப்பல்களை, அவற்றில் உள்ள ஆயுதங்களை, அதன் காவலர்களை பின்தொடர ஒருவரும் இல்லை. எனவே அவற்றை சர்வதேச ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 140 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களை பணி அமர்த்தி உள்ளன. இவர்கள் கடலில் ஒரு கப்பலில் இருந்து மற்ற கப்பல்களுக்கு மாறுகின்றனர். அதற்கான அனுமதியும் அவர்களிடம் இருப்பதில்லை.
கடலில் மிதக்கும் ஆயுத கிடங்காகவும் கப்பல்கள் இயங்குகின்றன. இப்படித்தான் சமீபத்தில் தூத்துக்குடி அருகே ஆயுதக்கப்பல் பிடிபட்டது. இந்தக் கப்பலில் 4 நாடுகளைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய காவலர்கள் 25 பேர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தளபதி ஜோஷி கூறினார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications