மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு #KamalaMills
மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்ற தீவிபத்து 15 பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video
மும்பை: மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்ற தீவிபத்தில் பலி எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மும்பையில் பரேல் பகுதியில் உள்ளது கமலா மில்ஸ். இங்கு ஹோட்டல்கள், பத்திரிகை அலுவலகங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களும் இந்த பல அடுக்கு கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் அங்கு 6-ஆவது மாடியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீவிபத்து நடைபெற்றது. இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது. இதில் 15 பேர் பலியாகிவிட்டனர்.
மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்த தீவிபத்து அந்த கட்டடத்தில் உள்ள ரெஸ்டாரென்ட்டில் இருந்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
#WATCH: Last night visuals of fire at #KamalaMills compound in #Mumbai's Lower Parel, the incident has claimed 14 lives. pic.twitter.com/Ud2s6QXTFF
— ANI (@ANI) December 29, 2017
Last night visuals of fire at #KamalaMills compound in #Mumbai's Lower Parel, the incident has claimed 14 lives. pic.twitter.com/wD2vm0o1u6
— ANI (@ANI) December 29, 2017