ஏரியில் படகு கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் பலி... சோகமயமான அனந்த்பூர்! - வீடியோ
ஆந்திரா அனந்த்பூர் ராமர் ஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் பலியாகினர். இதனால் அப்பகுதியே சோகமயமாக காட்சியளிக்கிறது.
அனந்த்பூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூர் ராமர் கோயில் ஏரியில் படகு கவிழ்ந்தால் 15 பேர் பலியாகினர். இதில் 9 பேர் சிறுவர்கள். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரமாநிலம், அனந்தபூர் அருகே உள்ளது ராமர் கோயில். இங்கு கோயில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்க சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மகக்ள் வந்திருந்தனர்.
ஒயிட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 20 பேர் கொடியேற்ற விழாவைக் காண வந்திருந்தார்கள். விழா முடிந்ததும், அருகில் இருந்த ஏரியில் 15 பேர் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக படகு கவிழ்ந்ததில் 15 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அதில் 9 பேர் சிறுவர்கள் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர அரசு உயிரிழந்துள்ளவர்களில் சிறுவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் பெரியவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கியுள்ளது.