கொல்கத்தா பெண் மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு.. கூட்டு பாலியல் வன்கொடுமையா?.. அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மருத்துவரின் உடலில் 150 மில்லிகிராம் உயிரணு இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூராய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Crime kolkata

மாணவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. பிறகு அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று மருத்துவர்கள் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். முழு செயல்முறையும் வீடியோ மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையின்போது அவரது தாய் உள்பட இரண்டு பெண்கள் உடனிருந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை கொலை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவரின் உடலில் உள்ள காயங்கள் மிகவும் மிருகத்தனமான, வன்முறைத் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையின் பல பகுதிகள் அதிர்ச்சியடைந்த அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இரண்டு காதுகள், உதடுகள் மற்றும் கழுத்தில் கடித்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மேலும், அவரது உடலில் 150 மில்லி கிராம் உயிரணு இருப்பது தெரியவந்துள்ளது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெண் மருத்துவரின் உடலில் 150 மில்லி கிராம் உயிரணு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவருகிறது என்று மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+