மிளகுப் பொடி வீச்சுடன் நிறைவடைந்தது 15வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர்
டெல்லி: 15வது லோக்சபாவின் கடைசிக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தும் நன்றியும் பரிமாறிக் கொண்டனர்.
மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கடைசிக் கூட்டத் தொடராக இது இருந்தது. இதில், முக்கிய மசோதாக்கல் தாக்கலாகி நிறைவேற்றப்பட்டுள்ளன.

தெலுங்கானா உள்ளிட்ட மசோதாக்கள் பல்வேறு கடுமையான அமளிகளுக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டன. இக் கூட்டத்தொடரில் தான் விநோதமாக மிளகுப் பொடி வீச்சு உள்ளிட்ட வினோத சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டன.
இன்றைய கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பாஜகவின் வெங்கைய நாயுடு முன் சென்று, நன்றி எழுதப்பட்ட கடிதக் குறிப்பை அளித்தார். தெலுங்கானா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற எதிர்க்கட்சி அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுஷ்மா ஸ்வராஜ்க்கு தனது நன்றியைத் தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.












Click it and Unblock the Notifications