ஆபரேஷன் தாமரைக்கு ரிவீட்?16 பாஜக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ ரெடி என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா!
ராஞ்சி: பாஜகவின் 16 எம்.எல்.ஏக்கள் தங்களது கட்சிக்கு தாவ உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திரவுபதி முர்மு போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நேற்று பதவியேற்றார்.
திரவுபதி முர்மு, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அவரையே ஆதரித்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றும் வருகிறது. இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சியின் 7 எம்.எல்.ஏக்களும் திரவுபதி முர்முவுக்கு வாக்களித்தனர்.

இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் பாஜக தமது வழக்கமான ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அரங்கேற்றுவதாக குற்றமும் சாட்டப்பட்டது. ஆனால் பாஜகவினர் இதனை மறுத்து வந்தனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சுப்ரியோ பட்டாச்சார்யா, பாஜகவி 16 எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் தாவ தயாராக உள்ளனர் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் பாஜக இதனை மறுத்துள்ளது.
மேலும் சுரங்க ஊழலில் சிக்கி இருக்கிறார் முதல்வர் ஹேமந்த் சோரன். அண்மையில் அவருக்கு நெருக்கமானவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதனை திசைதிருப்பத்தான் இப்படியான தகவல்களை ஹேமந்த் சோரன் தரப்பு பரப்பி விடுகிறது என்கின்றனர் பாஜக தலைவர்கள்.
எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?












Click it and Unblock the Notifications