டெல்லி: 18 வயதுப் பெண்ணும், அவரது தம்பியும் படுக்கை அறையில் கொலை...!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஒரு வீட்டில் 18 வயதுப் பெண்ணும், அவரது தம்பியும் படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தனர். இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இன்று காலை இருவரது உடல்களும் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. தங்களது உறவுப் பெண்மணியுடன் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.
கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு வயது 10 தான் ஆகிறது. இருவரது கழுத்திலும் படுகாயங்கள் காணப்படுகின்றன. அவர்களது உறவுப் பெண் இன்று காலை இருவரையும் எழுப்ப படுக்கை அறைக்குப் போனபோதுதான் இருவரும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்து அதிர்ந்தார்.
பெண்ணின் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன. அவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இருவரது உடல்களும் பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications