வாரணாசி: கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி- மோடி இரங்கல்
வாரணாசி: உத்திர பிரதேசம் வாரணாசியில் பாபா ஜெய் குருதேவ் சபா பங்கேற்ற நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள ஜெய் குருதேவ் ஆசிரமம் சார்பாக, வாரணாசியில் இருந்து சந்தேவ்லி வரை பேரணி நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பேரணியாகச் சென்றனர்.

ராஜ்காட் மேம்பாலத்தின் மீது நெருக்கடியான இடத்தில் அளவுக்கு அதிகமான மக்கள் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டுக்கொண்டு முந்த முயன்றதால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வரையும் இழப்பீடு வழங்குவதாக, உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
வாரணாசியில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அவர் ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாக அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications