19 வயது பாலியல் குற்றவாளிக்கு தூக்கு... சட்டத்தை சரியாக பயன்படுத்திய ராஜஸ்தான் அரசு... சபாஷ்!
7 மாத குழந்தையை கற்பழித்தவனுக்கு மரண தண்டனை தரப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்: சட்டமும் நீதியும் மட்டும் இல்லையென்றால் நாட்டில் இன்னும் என்னென்ன பாவங்கள் எவ்வளவு பெருகிவரும் என தெரியாது. தண்டனை சட்டத்தை சரியாக இயற்றி, சரியான நபருக்கு சரியான நேரத்தில் அமல்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அரசு.
ராஜஸ்தான் மாநிலம் லட்சுமண்கர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மே 9-ம் தேதி தம்பதி இருவரும் குழந்தையை உறவினர் ஒருவரது வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுவந்தனர். திரும்பி வந்து பார்க்கும்போது, அங்கே குழந்தை இல்லை. அதனால் குழந்தை எங்கே கேட்டதற்கு, பக்கத்து வீட்டு இளைஞர் தூக்கிக் கொண்டு போனதாக அந்த உறவினர்கள் பதிலளித்தனர். பக்கத்து வீட்டிலும் குழந்தையும் இல்லை, அந்த இளைஞரும் இல்லை.

அந்த வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனால் பதறியடித்து கொண்டு பெற்றோர் ஓடிசென்றனர். அங்கு குழந்தை கதறி அழுதபடி கிடந்தது. அதன் உடலில் காயங்கள் நிறைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பக்கத்துவீட்டு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இளைஞருக்கு வயது 19.
இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, 7 மாத குழந்தை என்றும் பாராமல் சிதைத்த அந்த இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த மார்ச் மாதம்தான், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சிறப்பு சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்தது. சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்த மரணதண்டனைக்கு ஆளாகும் முதல் நபர் இந்த இளைஞர்தான்.
கைக்குழந்தைகளை கூட விட்டுவைக்காத காம மனிதர்கள் நாடெங்கும் பெருகிவருகின்றனர். இதுபோன்ற செயல்களை செய்துவிட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கயவர்களுக்கு, தன்னுடைய நிஜ ரூபத்தை சட்டம் அவ்வப்போது வெளிப்படுத்தி தண்டிக்கும்போது ஓரளவு மனநிறைவு அடைகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சிசுக்களை நினைத்தால் மனம் கனத்துதான் போகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications