இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு
இந்தியாவைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்: அடுத்த மாதம் அமெரிக்கவில் நடக்கும் பனிச்சருக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ள காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது.
ஈரான்,ஈராக், சிரியா,சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய 7 இசுலாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் டிரம்பின் இந்த உத்தரவுக்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இருந்தனர். தங்களது அமெரிக்கப் பயணத்திற்காக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், இருவரின் விசாவை பரிசீலித்த தூதரகம், அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. தற்போதைய அமெரிக்காவின் கொள்கைப்படி விசா மறுக்கப்பட்டதாக தூதரகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு வீரர்களும் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications