இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த சதித்திட்டம்.. பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது.. திடுக்கிடும் தகவல்
லக்னோ: இந்தியாவுக்குள் பயங்கரவாத தக்குதல் நடத்தும் சதித்திட்டத்துன், போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்கள் போல சட்ட விரோதமாக இந்தியா-நேபாள எல்லை வழியாக ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானியர்களை உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்கள் முலம் இந்தியர்கள் போன்ற அடையாளத்துடன் இந்தியாவுக்கு ஊடுருவியர்களையும் அவர்களுக்கு உதவிய நபரையும் ரகசிய தகவலின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு படை பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலப்ஜா சவுத்ரி கூறியதாவது:-
ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் பயிற்சி முகாமில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ- உதவியுடன் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
நேபாள எல்லை வழியாக இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திற்குள் அவர்கள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, எலக்ட்ரானிக் முறையிலும் நேரடியாகவும் கண்காணிப்பு மேற்கொண்டோம். அப்போது இந்தியா - நேபாள எல்லையை ஒட்டியுள்ள சோனவுலி என்ற கிராமத்தில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த ஒருவர் என மொத்தம் மூன்று பேர் பிடிபட்டனர்.
கைதானவர்கள் முகம்மது அட்லப் பாட், சையது கஜ்னஃபர் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், முகம்மது அட்லப் பட் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தில் ஐ.எஸ்.ஐ அமைப்பு உதவியுடன் உதவி பெற்றவர் ஆவார்" என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications