For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி பேரணியில் குடிபோதையில் ரகளை... பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் கைது

Google Oneindia Tamil News

பலோத்ரா: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில் குடித்து விட்டு ரகளை செய்ததாக இரண்டு போலீசார் கைது செய்யப் பட்டுள்ளனர்.

குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று முன்தினம் ராஜஸ்தானில் உள்ள பலோத்ரா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார் மோடி. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மீனா மற்றும் காவலர் ஸ்ரீகிரிஷ்னன் ஆகியோர் மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பணி நேரத்தில் மது அருந்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏறப்டும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப் பட்டது. இதனால் அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

English summary
Two policemen deployed at the Narendra Modi rally in Balotra were on Sunday arrested for dereliction of duty and creating unrest at the ground in a drunken state, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X