பாக். அத்துமீறல்.. 3 இந்திய வீரர்கள் பலி.. தலையை துண்டித்து உடலை சிதைத்த கொடூரம்!

காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்.. 3 இந்திய வீரர்கள் மரணம்.. தலையை துண்டித்து உடலை சிதைத்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

ஜம்மு-காஷ்மீர்: மச்சால் பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 3 இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்திய- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மச்சால் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர் அங்குள்ள பாதுகாப்பு முகாம்கள் மீது திடீர் துப்பாக்கிச்டு நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரது தலையை துண்டித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரின் உடலையும் கண்மூடித்தனமாக சிதைத்துள்ளனர்.

2 soldiers killed, 1 beheaded in kashmir by Pakistan Army

வீரர்களின் உடலை சிதைப்பது கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கொடூர செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ராணுவம், இதற்கு தக்க பதிலடிக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் ஊடுருவி வீரர்களை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடிய பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த கோழைத்தனத்துக்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் மந்தீப் சிங் என்ற வீரர் தீவிரவாதிகளால் உடல் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு பின்னாள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு இருந்தது தெரியவந்துள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+