விமான ஊழியர்களை மிரட்டினால் 2 ஆண்டுகள் பறக்க தடை - மத்திய அரசு

விமான ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் 2ஆண்டுகள் பறக்க தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விமான ஊழியர்களை திட்டுவது, அடிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுப்பட்டால் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தி:

2-year 'flying ban' for unruly passengers

சக பயணிகள், ஊழியர்களை தாக்கினால் 6 மாதங்கள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, விமானத்தை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுப்பட்டால் 2 ஆண்டுக்கள் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், தனி நபர்களுக்கு தடை விதித்தால் விமானத்தில் பயணிக்க அவர்களும், தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா,விமான ஊழியர்களை தாக்கினால் 6 மாதமும், திட்டினால் 3 மாதமும் பறக்க தடை விதிக்கப்படும்.

ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுபவர்களுக்கு 2 வருடம் அல்லது அதற்கு மேல் பறக்க தடை விதிக்கப்படும்.
பயணிகள் நலன் கருதி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் சிலர் விமான நிலையத்திலும், விமானத்தில் பயணிக்கும் போதும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறுகின்றனர். இதற்காகவே இதுபோன்ற விதிகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+