விமான ஊழியர்களை மிரட்டினால் 2 ஆண்டுகள் பறக்க தடை - மத்திய அரசு
விமான ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் 2ஆண்டுகள் பறக்க தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: விமான ஊழியர்களை திட்டுவது, அடிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுப்பட்டால் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்தி:

சக பயணிகள், ஊழியர்களை தாக்கினால் 6 மாதங்கள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, விமானத்தை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுப்பட்டால் 2 ஆண்டுக்கள் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், தனி நபர்களுக்கு தடை விதித்தால் விமானத்தில் பயணிக்க அவர்களும், தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா,விமான ஊழியர்களை தாக்கினால் 6 மாதமும், திட்டினால் 3 மாதமும் பறக்க தடை விதிக்கப்படும்.
ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுபவர்களுக்கு 2 வருடம் அல்லது அதற்கு மேல் பறக்க தடை விதிக்கப்படும்.
பயணிகள் நலன் கருதி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல்வாதிகள் சிலர் விமான நிலையத்திலும், விமானத்தில் பயணிக்கும் போதும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறுகின்றனர். இதற்காகவே இதுபோன்ற விதிகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications