வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்களை கட்டயாப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய 2 பேர் கைது
பெங்களூர்: வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 இளம்பெண்களை பெங்களூருக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர்கள் சுனில் கவுடா(22), ராஜேஷ்(21). விபச்சார புரோக்கர்கள். அவர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மேற்கு வங்கத்தில் இருந்து பல பெண்களை பெங்களூருக்கு அழைத்து வந்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூர் வில்சன் கார்டன் பகுதி சித்தய்யா ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றபோது இளம்பெண்களுடன் ஆண்கள் உல்லாசமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சுனில் கவுடா மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அந்த இருவரின் கட்டாயத்தால் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.