மகாராஷ்ட்ராவில் அரசு பேருந்து-லாரி மோதி பயங்கர விபத்து.. 20 பேர் பலி
நாசிக்: மகாராஷ்ட்ர மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்மாநில அரசுப் பேருந்து ஒன்று ஜல்காவ் மாவட்டம் சலிஸ்காவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அந்த பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் துலே-சலிஸ்காவ் நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரியுடன் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி உருக்குலைந்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதில் 19 பேர் பேருந்தில் பயணம் செய்தவர்கள். மற்றொருவர் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்.
இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக துலே, சலிஸ்காவ் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications