மோடி 'சுனாமி'.. பாஜக மாபெரும் வெற்றி- மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறார்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வீசிய மோடி சுனாமி பேரலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட கூடுதல் தொகுதிகளைப் பெற்று அரியணை ஏற்கிறது. நாட்டின் 16வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார்.
நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

283 இடங்களைக் கைப்பற்றிய பாஜக
பாரதிய ஜனதா கட்சி மட்டும் 283 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த இடத்தில் மாநிலக் கட்சிகள் 147 இடங்களை பிடித்தன. காங்கிரஸ் கட்சியோ வெறும் 45 இடங்களைத்தான் கைப்பற்றியது.

தனிப்பெரும்பான்மை
ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைவிட மிக அதிகமாக எண்ணிக்கையில் பாஜக வென்றுள்ளதால் அக்கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

மோடி அபார வெற்றி
பாஜக முன்னிறுத்திய நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கிறார். அவர் போட்டியிட்ட குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலுமே அபார வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தில் இருந்து 2வது பிரதமர்
குஜராத்தைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய் 1977ஆம் ஆண்டு நாட்டின் பிரதமரானார். தற்போது குஜராத்தை சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார்.

பாஜக கொண்டாடம்
பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் வென்றதை நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடித் தீர்த்தனர்.

வதோதராவில் மோடி
மோடி தாம் போட்டியிட்ட வதோதரா தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய மோடி, வதோதரா சகோதர்கள் முன்புதான் முதன்முதலில் உரையாற்ற விரும்பினேன். .உங்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன். வதோதராவில் 50 நிமிடம் தான் என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது. ஆனால் எனக்கு 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அளித்துள்ளீர்கள். ஜனநாய நடைமுறையை புரிந்து கொண்டதால் இந்த வெற்றியை அளித்துள்ளீர்கள். குஜராத்தில் 60% மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். நான் ஏற்கனவே கூறிய படி குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் மக்கள் வெற்றி தந்துள்ளனர் என்றார்.

21-ந் தேதி பொறுப்பேற்பு
வரும் 21-ந் தேதி நாட்டின் 16வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார். நரேந்திர மோடிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications