டெக்கிகளுக்கு நல்ல செய்தி.. 2018 பட்ஜெட்டில் விலை குறையப்போகும் கேட்ஜெட்டுகள்!
2018 பட்ஜெட்டில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: பொதுவாக பட்ஜெட்டின் போது மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் அதிகமாக கருத்தில் கொள்ளப்படும். ஆனால் பலரும் மொபைல், டேப்லெட், கணினி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் விலை மாற்றத்தை கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.
இப்போதெல்லாம் நாம் காய்கறி, உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவோம், ஆண்ட்ராய்ட், ஆப்பிள் இல்லாமல் இருக்க முடியாது. இந்த 2018 பட்ஜெட் இப்படி இருக்கும் நபர்களுக்கு எல்லாம் நல்ல செய்தி ஒன்றை கொண்டு வர இருக்கிறது.
இந்த பட்ஜெட்டிற்கு பிறகு பெரும்பாலான கேட்ஜெட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கல்வி சார்ந்த கேட்ஜெட்களின் விலை குறையும்.

பழைய விலை
சில வருடங்கள் முன்புவரை மொபைல், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு 5% வரி விதிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக மொபைல் போன்களின் விலை மிகவும் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் கட்டுப்படுத்தும்படி இருந்தது. நிறைய பட்ஜெட் போன்களும் வர தொடங்கியது.

குறைவானது
இந்த நிலையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதேபோல் திடீர் என்று ஆன்லைன் வர்த்தகம் உச்சத்தை அடைந்தது. இதனால் இதன்மீது இருந்த 5 சதவிகித வரி நீக்கப்பட்டது, மொபைல்களில் மட்டும் குறைந்தபட்ச வரி விதிக்கப்பட்டது. மற்றபடி டேப்லெட்களில் வரி நீக்கப்பட்டது.

மீண்டும் அதிகம்
ஆனால் ஜி.எஸ்.டி அறிமுகம் ஆன பின் மீண்டும் விலை கூடியது. டேப்லெட்களில் பூஜ்ய வரியில் இருந்து 18 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இதனால் திடீர் என்று விலை மிகவும் அதிகம் ஆனது. பட்ஜெட் போன்களின் உற்பத்தி குறைத்துக் கொள்ளப்பட்டது. இது மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியது.

'பழைய ஆண்ட்ராய்ட் செல்வம்'
இந்த நிலையில் பழைய ஆண்ட்ராய்ட் செல்வமாக மீண்டும் விலை குறைய இருக்கிறது. இந்த நிலையில் இந்த 18 சதவிகித வரி குறைத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த 2018 பட்ஜெட்டில் மீண்டும் 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 1ல் அறிமுகம் ஆகும் இந்த மாற்றத்தால் அந்த மாத இறுதியில் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications