சட்டவிரோத மது விருந்து... ஆபாச நடனமாடிய இளம்பெண்கள்-மாணவர்கள் உள்பட 262 பேர் கைது
மும்பை: மது விருந்தில் கலந்து ண்டு ஆபாச நடனம் ஆடியதாக குற்றம் சாட்டப்பட்டு 217 இளம் பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 262 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவிமும்பையின் நெருல், பால்ம் பீச் சாலை பகுதிகளில் இரவு நேர மதுவிருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சர்சோலே சந்திப்பு பகுதியில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் இளம்பெண்கள் அளவுக்கதிகமாக போதையுடன், ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக இரவு மது விருந்து நடத்தியதாக அங்கிருந்த 262 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் 217பேர் மாணவர்கள் மற்றும் இளம்பெண்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெயின் லோங்கே என்பவர் இந்த மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்காக என்.எம்.எம்.சி. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.