அலுவலகத்தில் பார்ட்டி.. அது முடிந்ததும் பலாத்காரம்.. குர்கான் கொடுமை!
குர்கான்: ஹரியானா மாநிலம் குர்கானில் அலுவலகத்தில் நடந்த இரவு விருந்து்குப் பின்னர் பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுதியுள்ளது
அந்தப் பெண்ணுக்கு 22 வயதாகும். குர்கானில் உள்ள தனியார் நிறுவனதில் பணியாற்றி வருகிறார். பஞ்ச்கான் பகுதியில் உள்ள இவரது அலுவலகதில் சனிக்கிழமை இரவு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அருகில் உள்ள ரிசார்ட்டில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 60 பேர் இதில் கலந்து கொண்டனர். விருந்து முடிந்தும் சம்பந்தப்பட்ட பெண் அங்கிருந்த அறைக்குள் போயுள்ளார். அப்போது உள்ளே புகுந்த சக ஊழியர் ஒருவர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் மருத்துவப் பரிசோதனை நடத்தி பலாத்காரம் நடந்திருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட 28 வயது ஊழியர் கைது செய்யப்பட்டார்.