69 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 24 வயது வாலிபர்!
பெங்களூரு: 69 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 24 வயது கட்டுமான தொழிலாளியை குற்றவாளி என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் 69 வயது மூதாட்டி. இவரது இரு மகள்களும் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், மகன் மங்களூருவின் வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலைியல் மூதாட்டியின் வீட்டுக்கு பக்கத்தில் அவரது மகளுக்காக ஒரு வீடு கட்டப்பட்டு வந்தது. இந்த வீட்டின் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தவர் நாகேஷ் (24).
கட்டிட தொழிலாளிகளுக்காக பக்கத்தில் கட்டப்பட்டிருந்த தற்காலிக ஷெட்டில் நாகேஷும் தங்கியிருந்தார். கடந்த ஆண்டு ஜூலை 14ம்தேதி, இரவு 7.15 மணிக்கு நாகேஷ் திடீரென பெண்மணி வீட்டு கதவை தட்டியுள்ளார். தொழிலாளிதானே என்று நினைத்து அந்த பெண்ணும் கதவை திறந்தார். அரிவாளுடன் உள்ளே புகுந்த நாகேஷ் கதவை மூடிவிட்டு, மூதாட்டியை பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.
தனக்கு வயதாகிவிட்டதையும், நோய் பிரச்சினைகள் இருப்பதையும் கூறி தன்னை விட்டுவிடுமாறு அந்த பெண் கெஞ்சியும், நாகேஷ் அவரை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, மூதாட்டியின் உதடு, முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், ரூ.5.500 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு நாகேஷ் தப்பிவிட்டார்.
இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெங்களூரை அடுத்த நாகேஷின் சொந்த ஊரான சிந்தாமணியில் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட ஆறாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பாஞ்சலி தேவி, நாகேஷை குற்றவாளி என்று அறிவித்துள்ளார். தண்டனை விவரத்தை செவ்வாய்க்கிழமை அறிவிப்பதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications