பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இன்னும் நீடிக்கும் பதட்டம்!
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் டிசம்பர் 6-ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்படுகிறது.
டெல்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகிவிட்ட போதிலும் டிசம்பர் 6-ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த உளவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆண்டுதோறும் பலப்படுத்தப்படுகிறது.
அதன்படி, இன்றைய தினம் பாபர் மசூதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து பெரும்பாலான இடங்களில் பதற்றம் ஏற்படும் நிலை உள்ளதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உளவுத் துறை மாநில காவல் துறை தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கூட்டம் நிறைந்த இடங்கள்
அதேவேளை இரட்டை நகரங்களான ஃபரீதாபாத் மற்றும் அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய கட்டடங்கள், கூட்டம் நிறைந்த கடைவீதிகள், பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர். மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்
ஏதேனும் வதந்திகள் பரப்பப்படலாம் என்பதால் அதுகுறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் இரட்டை நகரங்களில் உள்ள மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருப்பு தினம்...
பாபர் மசூதி தினத்தையொட்டி விஸ்வ இந்து பரிஹத் சார்பில் வெற்றி தினமாக அனுசரித்து தலைமையகமான அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் இன்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். பொதுக் கூட்டங்கள், ஊர்வலம், பேரணி ஆகியவற்றை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications