பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இன்னும் நீடிக்கும் பதட்டம்!
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் டிசம்பர் 6-ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்படுகிறது.
டெல்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகிவிட்ட போதிலும் டிசம்பர் 6-ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த உளவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆண்டுதோறும் பலப்படுத்தப்படுகிறது.
அதன்படி, இன்றைய தினம் பாபர் மசூதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து பெரும்பாலான இடங்களில் பதற்றம் ஏற்படும் நிலை உள்ளதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உளவுத் துறை மாநில காவல் துறை தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கூட்டம் நிறைந்த இடங்கள்
அதேவேளை இரட்டை நகரங்களான ஃபரீதாபாத் மற்றும் அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய கட்டடங்கள், கூட்டம் நிறைந்த கடைவீதிகள், பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர். மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்
ஏதேனும் வதந்திகள் பரப்பப்படலாம் என்பதால் அதுகுறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் இரட்டை நகரங்களில் உள்ள மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருப்பு தினம்...
பாபர் மசூதி தினத்தையொட்டி விஸ்வ இந்து பரிஹத் சார்பில் வெற்றி தினமாக அனுசரித்து தலைமையகமான அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் இன்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். பொதுக் கூட்டங்கள், ஊர்வலம், பேரணி ஆகியவற்றை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications