தங்கம் வென்ற வீராங்கனை.. கழுத்தில் விழுந்த 270 கிலோ.. எமனாக மாறிய விளையாட்டு பயிற்சி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பவர் லிஃப்டிங்கில் தங்கப்பதக்கம் பெற்றவர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 18 தேதி அன்று பவர் லிஃப்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது யஷ்டிகா ஆச்சார்யா 270 கிலோ எடையுள்ள கம்பியை தூக்கிய போது, தவறி விழுந்து கழுத்து உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் ஜூனியர் தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பவர் லிஃப்டிங் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா (17 வயது) ஜிம்மில் செவ்வாய்க்கிழமை அன்று (பிப்ரவரி 18 அன்று) பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது பயிற்சியாளர் உதவியுடன் 270 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக யஷ்டிகா ஆச்சார்யா தலைக்கு மேல் 270 கிலோ எடையை தூக்க முயன்ற போது, கை தவறியது.
அப்போது பயிற்சியாளரும் வாங்க முயற்சித்தார். ஆனால் அவரால் வாங்க முடியவில்லை.. இதனால் யஷ்டிகா ஆச்சார்யாவின் கழுத்தின் பின்பக்கம் அப்படியே மொத்த எடையும் விழுந்தது.இதில் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யாவின் கழுத்து நரம்பு உடைந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் யஷ்டிகா ஆச்சார்யா மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பவர் லிஃப்டிங் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார். அவருக்கு நடந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
பவர் லிஃப்டிங் என்பது ஒரு வலிமையான விளையாட்டு ஆகும். இதில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிஃப்ட் என்ற மூன்று லிஃப்ட்களில் அதிகபட்ச எடையை தூக்கும் விளையாட்டு ஆகும் . இந்த விளையாட்டு ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக இல்லை..

விளையாட்டுகளில் ஏற்படும் விபத்துகள், அரிதானவை ஆகும். எனினும் கடந்த காலங்களில் விபத்துக்கள் நடந்துள்ளன. கிரிக்கெட் மைதானத்தில், ஆஸ்திரேலியாவின் பிலிப் ஹியூஸ், 2014 ஆம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியின் போது பவுன்சர் பந்து தாக்கியதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications