2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: ஆ.ராசா வாக்குமூலம் பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற நோக்குடன் தவறு செய்தல், ஊழல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

2G case: Court commence recording of statements of A.Raja

இந்த வழக்கில் இரு குற்றப்பத்திரிகைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் மீது நடைபெற்று வரும் இறுதிகட்ட விசாரணை இன்று மீண்டும் தொடர்கிறது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆஜராகி தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் இன்று முதல் ஆஜராகி வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும், கலைஞர் டி.வி. பண பரிவர்த்தனை விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீது, வரும் 26-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 2ஆம் தேதி சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+