ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோரிடம் ஏப்ரல் 4 முதல் சாட்சியம் பதிவு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் சாட்சியம் ஏப்ரல் 4-ந் தேதி பதிவு செய்யப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த திமுகவின் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் தொழில்நிறுவன நிர்வாகிகள் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் சாட்சியம் அடுத்த மாதம் 4 ந் தேதி பதிவு செய்யப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்காக கேள்விகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறிய சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, கேள்விகள் அளிக்கப்பட்ட ஒருவார காலத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எழுத்துபூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவ்வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சிகளிடம் கடந்தாண்டு நவம்பர் மாதம் வாக்குமூலத்தை நீதிமன்றம் பெற்றது. இவ்வழக்கு தொடர்பான சிபிஐ தரப்பு சாட்சிகளின் ஆதாரங்களை பதிவு செய்யும் பணிகளையும் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications