2ஜி ஊழல் வழக்கில் ரிலையன்ஸ் அதிகாரிகள் வாக்குமூலம்
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சி.பி.ஐ கோர்ட்டு நீதிபதி சைனி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
2ஜி வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா முதலில் வாக்குமூலம் அளித்தார். அவரைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி வாக்குமூலம் அளித்தார்.

இவர்களைத் தொடர்ந்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டு அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது. இன்று ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன அதிகாரிகள் வாக்கு மூலம் கொடுத்தனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஜோஷி, ஹரிநாயர், சுரேந்தனர் பிபாரா ஆகியோர் வாக்குமூலம் கொடுத்தனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு மூத்த அதிகாரியும் வாக்குமூலம் கொடுக்க உள்ளார். இதையடுத்து மற்ற நிறுவன அதிகாரிகள் சி.பி.ஐ கோர்ட்டுக்கு வந்து வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications