For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாமில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்.. ரிக்டரில் 3.5 ஆக பதிவு!!

By Mathi
Google Oneindia Tamil News

அஸ்ஸாம்:நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பலியான நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.5 அலகுகளாகப் பதிவாகி இருந்ததால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிகக் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரம் பேர் பலியானார்கள்.

அதே நாளில் இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 90 பேர் பலியாகினர்.

3.5 magnitude quake felt in Assam

அதன் பின்னர் தொடர்ந்து நேபாளத்தில் பலமுறை பின் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் இந்த பின் அதிர்வுகள் அவ்வப்போது உணரப்படுகிறது.

இதனிடையே அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று அதிகாலை மீண்டும் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.

சோனித்பூர் மாவட்டத்தின் 28.8 டிகிரி வடக்கிலும் 92.5 டிகிரி மேற்கிலும் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்திலும் இது மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கத்தால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
An earthquake of slight intensity measuring 3.5 on the Richter Scale shook Assam in the early hours of Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X