“ஷாக்”.. 2 இந்திய ராணுவ வீரர்கள், டிஎஸ்பி சுட்டுக்கொலை! பயங்கரவாத தாக்குதலால் பதற்றத்தில் காஷ்மீர்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் நமது ராணுவ கர்னல் உட்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டம் பதற்றம் நிறைந்த பகுதியாகும். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த இப்பகுதியில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும், ரோந்து செல்வதும் வாடிக்கை. இங்கு அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும், நம் ராணுவ வீரர்கள் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெறும்.

இந்த நிலையில் இன்று ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் ஆனந்த்நாக் மாவட்டம் கோகெர்நாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே நீடித்த இந்த தாக்குதலில் நம் வீரர்கள் மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.
அதில் ஒருவர் ராணுவ கர்னல் மன்பிரீத் சிங். மற்றொருவர் மேஜர் ஆஷிஷ். இவர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காஷ்மீர் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட்டும் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளார். இதில் போலீஸ் டிஎஸ்பி ஹுமாயுன் அதிகளவிலான ரத்தம் வெளியேறியதால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரின் கடோலே பகுதியில் செவ்வாய் கிழமை பயங்கரவாதிகளுக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட ராணுவமும், காஷ்மீர் காவல்துறையும் முடிவு செய்து இருக்கிறது. ஆனால், நேற்று இரவு அந்த திட்டத்தை கைவிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் காலை பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ராணுவம் இறங்கி இருக்கிறது. இந்த ஆபரேசனில் இறங்கிய குழுவிற்கு கர்னல் சிங் முன் நின்று தலைமை தாங்கி வழிநடத்தி சென்று இருக்கிறார். அப்போது பயங்கரவாதிகளின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த குண்டு கர்னல் சிங்கின் உடலை துளைத்து உயிரை பறித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் 3 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications