Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவானி சிங் மீது சந்தேகம் உள்ளது.. ஆஜராகக் கூடாது... 3 நீதிபதிகள் முன்பு அன்பழகன் வக்கீல் வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருக்கிறது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் சரிவர அவர் ஆஜராகவில்லை. மேலும் அவருக்கு ஜாமீனையும் அவர் எதிர்க்கவில்லை. எனவே அவர் ஆஜராகக் கூடாது என்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் ஆஜரான அன்பழகன் வழக்கறிஞர் அந்தியர்ஜூனா வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கியுள்ளது.

அப்பீல் வழக்கு

அப்பீல் வழக்கு

சொத்து வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் செய்துள்ளார். தனி நீதிபதி குமாரசாமி முன்பு நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்துள்ளார்.

பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு

பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு

இந்த நிலையில் அப்பீல் விசாரணையில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானது செல்லாது என்றும் வேறு வழக்கறிஞரை நியமிக்க கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இருவேறு தீர்ப்புகள்

இருவேறு தீர்ப்புகள்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, மதன் பி.லோகூர் அடங்கிய அமர்வு இரு வேறு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இன்று அன்பழகன் மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா சி.பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கியது. அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் அந்தியர்ஜுனா ஆஜராகி வாதாடினார்.அப்போது நீதிபதி பந்த் அவரிடம், ஒரு வழக்கில் அரசு வக்கீல் நியமனத்தை தனி நபர் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என்றார்.

கர்நாடகாவிற்கு வழக்கு மாற்றம்

கர்நாடகாவிற்கு வழக்கு மாற்றம்

அதற்கு வக்கீல் அந்தியர்ஜுனா பதில் அளிக்கையில், இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்ற காரணமாக இருந்தவரே அன்பழகன்தான் என்றார்.

பவானிசிங்கின் செயல்பாடு எப்படி

பவானிசிங்கின் செயல்பாடு எப்படி

தொடர்ந்து நீதிபதி அவரிடம், ஒவ்வொரு முறையும் அரசு வழக்கறிஞர் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்புவது ஏன்? விசாரணை நீதிமன்றத்தில் பவானிசிங் எப்படி செயல்பட்டார்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அந்தியார்ஜூனா, பவானி சிங் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருக்கிறது. அவர் விசாரணையில் ஆஜராகாமலும், ஜாமீனை எதிர்க்காமலும் செயல்பட்டார் என்றார்.

விசாரணை ஒத்திவைப்பு

விசாரணை ஒத்திவைப்பு

காலை தொடங்கி பிற்பலிலும் அன்பழகன் வழக்கறிஞர் அந்தியார்ஜூனா வாதிட்டார். ஜெயலலிதா சார்பில் பாலி நாரிமன் வாதிட்டார். விசாரணைக்கு பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+