2 பைலட் உள்பட 3 பேர் பலி.. குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து
காந்தி நகர்: குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் வழக்கமான பயிற்சியின்போது கடலோர காவல் படைக்கு செந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் இன்று திடீரென்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 பைலட் உள்பட 3 பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் தற்போது பயணிகள் விமானம் என்பது இயக்கப்படுவது இல்லை. இந்த விமான நிலையத்தை இந்திய விமானப்படையின் விமானங்கள் உள்பட பிற படைப்பிரிவுகளை சேர்ந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தான் பயன்படுத்தி வருகின்றன.

அரபிக்கடல் பகுதியையொட்டி இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இதனால் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தான் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதாவது இன்று வழக்கமான பயிற்சியின்போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டரில் 2 பைலட் உள்பட 3 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் விமான நிலையத்தில் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர் உடனடியாக விரைந்து மீட்டு பணியை தொடங்கினர். ஆனால் அதற்குள் ஹெலிகாப்டரில் பயணித்த 2 பைலட் உள்பட 3 பேரும் இறந்துள்ளனர். இதுபற்றி இந்திய கடலோர காவல்படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, ‛‛இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் விபத்தில் சிக்கியது. இது வழக்கமமான பயிற்சி பணியின்போது விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் உள்பட 3 பேர் பயணித்தனர். இந்த 3 பேரும் மரணடைந்துள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான காரணம் என்ன?என்பது உடனடியாக தெரியவில்லை. அதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த போர்பந்தர் பகுதியில் கடலோர காவல்படையின் விமானம் இப்படி விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்திய கடலோர காவல்படையின் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானிகள் விபின் பாபு, ராகேஷ் ராணா, டைவர்கள் கரண் சிங் உள்ளிட்டவர்கள் இறந்தனர். டைவர் கவுதம் குமார் மீட்கப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications