தலை இல்லாத 3 வயது குழந்தை.. பிளாஸ்டிக் பையில் சடலம்.. சிதைத்து நாசம் செய்த 3 பேர் கைது
3 வயது குழந்தையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்
Recommended Video
ஜாம்ஷெட்பூர்: 3 வயசு குழந்தையின் தலையில்லா உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு, அதன் தலையை தேடி வருகிறார்கள் போலீசார்!
ஜார்க்கண்ட் மாநிலம் தடாநகர் ரயில்வே ஸ்டேஷனில் போன செவ்வாய்கிழமை, பிளாட்பாரத்தில் தாயுடன் 3 வயசு குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.
பிறகு தாய் கண் விழித்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் மாயமான குழந்தையை பல இடங்களில் தேடியும், கடைசியில் பெற்றோர் போலீசில் புகார் தந்தனர்.

குற்றவாளி
இதையடுத்து ரெயில்வே ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் தூங்கும் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து செல்வது கண்டறியப்பட்டது. இந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, போலீசார் குற்றவாளி யார் என்று விசாரித்தனர்.

திடுக் தகவல்
அவர் பெயர் ரின்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதில் மேலும் 2 பேருக்கு கூட்டு என்ற திடுக் தகவல் வெளியானது. குழந்தையை நாசம் செய்ததுடன், ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து 4 கிமீ தூரத்தில் ஒரு புதருக்கு பின்னால் போட்டுவிட்டனர்.

பலாத்காரம்
இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பையிலிருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. ஆனால் தலை இல்லை. குழந்தையின் மர்ம பகுதியில் காயங்கள் இருந்தன. குழந்தையை பலாத்காரம் செய்து, அதற்கு பிறகு கழுத்தை நெரித்து.. அதற்கு பிறகு தலையையும் துண்டித்ததாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டனர்.

3 பேர் கைது
இதில் ரின்கு என்பவன் ஏற்கனவே இப்படிப்பட்ட கொடூரமான செயல்களை எல்லாம் செய்தவனாம். 2015-ம் வருஷம் 7 வயது குழந்தையை கடத்தி கொலையும் செய்து, ஜெயிலுக்கும் போனவனாம். 2 வருஷ ஜெயிலுக்கு பிறகு 2 வாரத்துக்கு முன்னாடிதான் ரிலீஸ் ஆகி உள்ளான். அடுத்தவாரமே இப்படி இன்னொரு மாபாதகத்தை செய்துள்ளான். இதையடுத்து ரின்கு மற்றும் உடனிருந்த கைலாஷ் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications