ஒடிசாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது... 30 கிராமியக் கலைஞர்கள் பலி - 10 பேர் காயம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 கிராமிய கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் தியோஹர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிராமியக் கலைஞர்கள் குழு ஒன்று பார்கர் மாவட்டத்தில் உள்ள ரேம்டா பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவில் குழந்தைகள், பெண்கள் உட்பட 40 இசைக் கலைஞர்கள் இருந்துள்ளனர்.

பேருந்து, திலேபானி காலோ மலைப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 250 அடி ஆழம் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரும், தீயணைப்புப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடம் கடினமான மலைப் பகுதியாகவும், அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருந்ததால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டதாக தேவ்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாரா சர்மா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications