மணப்புரம் நிதி நிறுவனத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம் கொள்ளை..மர்ம நபர்கள் கைவரிசை
மணப்புரம் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானே: மணப்புரம் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தானே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்க நகை மீது கடன் கொடுப்பதில் முக்கிய நிறுவனங்களுள் மணப்புரம் பைனான்ஸும் ஒன்று. இந்த நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மணப்புரம் நிறுவனத்தில் இன்று கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிதி நிறுவனத்தின் பாத்ரூம் வழியாக துழையிட்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 32 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ9 கோடி என போலீசார் கூறியுள்ளனர். கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் அங்கு பணிபுரிந்து காவலாளி மாயமாகியுள்ளனர். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.