மகாராஷ்டிரா: பாதுகாப்பு படை தாக்குதலில் பலியான மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் பலி எண்ணிக்கை
Subscribe to Oneindia Tamil
கட்ச்ரோலி: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பலியான மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
கட்ச்ரோலி வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இருதரப்பு இடையே பல மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. குழு குழுவாக மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இம்மோதலில் முதலில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளைத் தேடும் பணியில் மொத்தம் 37 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அண்மைக்காலத்தில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மேற்கொண்ட மிகப் பெரிய நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications