ஈராக்கில் கடத்தப்பட்ட 40 இந்தியர்களின் கதி என்ன? தீவிரவாதிகளால் சுட்டுக் கொலையா?
டெல்லி: ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவுப் படையால் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்களின் கதி குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. முன்பு வெளியான செய்திகளின்படி கடத்தப்பட்டோரில் 39 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனரா? என்ற சந்தேகமும் தொடர்ந்து இருந்து வருகிறது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பானது ஈராக்கின் பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். இந்த சதாம் ஆதரவுப் படை வடக்கு ஈராக்கின் மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை அப்படை கைப்பற்றியுள்ளது.

18 ஆயிரம் இந்தியர்கள் பரிதவிப்பு
இதனால் ஈராக்கில் பணியாற்றி வரும் 18 ஆயிரம் இந்தியர்கள் நிலை கேள்விக்குறியானது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிடியில் உள்ள தக்ரீத் நகரில் 46 கேரள செவிலியர்கள் சிக்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 6 செவிலியர்களும் ஈராக்கில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதேபோல் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 600 பேரும் ஈராக்கில் சிக்கி இருப்பதாக அம்மாநில அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் மொசூல் நகரில் பணியாற்றிய 40 இந்தியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
முதலில் இதை உறுதிப்படுத்தாத மத்திய அரசு பின்னர், ஆம் 40 இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்தது. அத்துடன் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க அந்நாட்டுக்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டியை சிறப்புத் தூதராகவும் அனுப்பி வைத்தது.
கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் பஞ்சாப் மாநில அரசு, மத்திய அரசுடன் இணைந்து கடத்தப்பட்டோரை மீட்கும் பணியில் மும்முரம் காட்டி வந்தது.
இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்ட ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
39 பேர் சுட்டுக் கொலையா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியான செய்தி:
மொசூல் நகரில் தாரிக் நூர் அல் ஹூடா என்ற கட்டுமான நிறுவனத்தில் 40 இந்தியர்கள் மற்றும் 53 வங்கதேச நாட்டவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். படையினர் மொசூல் நகரை கைப்பற்றியதும் பாஸ்போர்ட்டுகளை பணியாளர்களிடம் கொடுத்து சொந்த நாட்டுக்கு தப்பிச் செல்லுமாறு அக்கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் பணியாளர்களோ 3 ஆண்டுகால ஊதியம், விமான டிக்கெட் எடுத்துத் தருமாறு கேட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அனைவரும் அங்கே உள்ள மருத்துவமனை ஒன்றில் 2 நாட்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் இந்தியர்களும் வங்கதேசத்தவரும் தனித்தனியே குர்திஷ் பகுதியான எர்பில் நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் எர்பில் நகருக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த 53 பேரும் பாதுகாப்பாக சென்றுவிட்டனர். 40 இந்தியர்களில் ஒருவரான ஹர்கித் என்பவர் மட்டுமே எர்பில் சென்றடைந்துள்ளார்.
அங்கு அவர் வங்கதேச நாட்டின் டாக்காவைச் சேர்ந்த ஜமைல் கான் என்பவரிடம், நாங்கள் 40 இந்தியர்களும் எர்பில் நோக்கி தப்பி வரும்போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டோம். நான் தப்பி வந்துவிட்டேன். இதர 39 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை தங்களிடம் வங்கதேச பணியாளர் ஜமைல்கான் என்பவர் உறுதி செய்து தெரிவித்தார்.
இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு கூறியிருந்தது.
ஆனால் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளோ, ஈராக்கில் உள்ள சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து உறுதியான தகவலைப் பெறும் வரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியாது என்று கூறியிருந்தனர்.
மேலும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், ஈராக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறியிருக்கிறார். அதேபோல் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சில உறவினர்களும், கடத்தப்பட்டோரிடம் தாங்கள் பேசியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
இருப்பினும் கடத்தப்பட்ட 40 பேரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா? அல்லது 39 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனரா? என்பது குறித்த குழப்பம் நீடித்தே வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications