நாளை நீட் தேர்வு.. எர்ணாகுளத்தில் உதவி மையங்கள்.. மாணவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்
எர்ணாகுளத்தில் 4 உதவி மையங்கள் அமைக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரும் ஒவ்வொரு உதவி மையத்தில் இருப்பார். அவருடன் சேர்த்து, ஒவ்வொரு மையத்திலும் 10 பேர் இ
Recommended Video
கொச்சி: நீட் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக எர்ணாகுளத்தில் 4 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ நுழைவு தேர்வான நீட், நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், ஹோட்டல் அறைகளில் தங்கியபடி தேர்வுக்காக அவர்கள் தயாராகி வருகிறார்கள்.
ஆனால், தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதில் மாணவ, மாணவிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த மாணவர் குமுறல் செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், எர்ணாகுளத்தில் அமைக்கப்பட்ட அனைத்து உதவி மையங்களும் செயல்பட தொடங்கின என்றும் உதவிக்கு 90615 18888 எண்ணுக்கு வாட்ஸ் அப், குறுஞ்செய்திகளை அனுப்பலாம் என்றும், கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
எர்ணாகுளத்தில் 4 உதவி மையங்கள் அமைக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரும் ஒவ்வொரு உதவி மையத்தில் இருப்பார். அவருடன் சேர்த்து, ஒவ்வொரு மையத்திலும் 10 பேர் இருப்பார்கள்.
உதவி எண் விவரம்:
எர்ணாகுளம் வடக்கு: 9048520012, 9895320567
எர்ணாகுளம் தெற்கு: 9567466947, 9020606717
ஆலுவா: 9946290608
எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்ட உதவி மையங்களில் தமிழ்பேசும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம் வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் தயார் என்று, எர்ணாகுளம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.