Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவா பிளான் போட்டு கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. கூகுள் மேப்பால் நடுக்காட்டுக்குள் தவித்த குடும்பம்

Subscribe to Oneindia Tamil

பீகார்: பீகாரில் இருந்து கோவாவுக்கு செல்வதற்காக புறப்பட்ட 4 பேர் கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதால் நள்ளிரவில் கர்நாடக மாநிலம், பெலகாவியில் உள்ள நடுக்காட்டில் சிக்கி வழி தெரியாமல் திணறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரு ஆண்டிராய்டு மொபைல் இருந்தாலே போதும் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே செய்யலாம் என்கிற வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. முதலில் எல்லாம் முகவரி என்றாலே ஆட்டோக்காரர்களை தேடும் கண்கள் எல்லாம் இப்போது மொபைல் போனில் கூகுள் மேப் போட்டுக் கொண்டு தெரியாத பகுதிகளுக்கும் சட்டென்று சென்று வருகின்றனர்.

goa google map bihar

வாடகை கார்கள், கேப்கள், ஸ்விக்கி, ஜொமேட்டோ டெலிவரி, கொரியர் டெலிவரி, சுற்றுலா செல்வோர் என அனைத்து தரப்பினருமே கூகுள் மேப்பை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் டிராஃபிக் ஜாம், எளிமையான வழிகளைக் கண்டறியலாம். ஒருவகையில் கூகுள் மேப் பல்வேறு பலன்களைக் கொடுத்தாலும் இதன் மூலம் பாடய் பட்டவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.

கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் ஒரே இடத்தை பலமுறை சுற்றியவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலையில், பீகாரில் இருந்து கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்ற குடும்பம் ஒன்று தவறான வழிகாட்டலால் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோவாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் வழி பார்ப்பதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளனர். அப்போது, கூகுள் மேப்பில் தவறாக வழியை காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குடும்பத்தினரும் கூகுள் மேப்பின் உதவியோடு கோவாவுக்கு ஜாலியாக சென்றுள்ளனர்.

நேரம் நெருங்க நெருங்க தான் சம்பவமே நடந்துள்ளது. அடர்ந்த வனப் பகுதியில் கூகுள் மேப் வழி காண்பித்துள்ளது. அந்தக் குடும்பத்தினரும் இயற்கையை ரசித்துக் கொண்டே சென்ற நிலையில் ஒருகட்டத்தில் இருட்டு கட்டத் தொடங்கியுள்ளது. மொபைல் நெட்வொர்க்கும் வேலை செய்யாமல் போயுள்ளது. சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருவரையும் காணாத நிலையில் அந்தக் குடும்பத்தினர் பதறிப் போயுள்ளனர்.

முடிந்த வரை ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என பார்த்த அவர்கள் ஒருகட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் காருக்குள்ளேயே விடிய விடிய இருந்துள்ளனர். கோவாவுக்கு வழிகேட்ட நிலையில் கூகுள் மேப் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அவர்களை சிக்க வைத்துள்ளது. அந்தக் காரில் குழந்தைகள் உட்பட ஆறு முதல் ஏழு பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

பொழுது விடிந்ததும் மொபைல் சிக்னல் கிடைப்பதற்காக 4 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் நடந்து சென்றுள்ளனர். மொபைல் சிக்னல் கிடைத்தவுடன் அவசர உதவி எண் 112 ஐ தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். பின்னர், உள்ளூர் போலீஸார் அவர்களை காட்டில் இருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.

கூகுள் மேப்பைப் பின்தொடர்ந்து சென்றபோது பரேலி - பிலிபித் நெடுஞ்சாலையில் இச்சம்பவம் நடைபெற்றதாக அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல, நவம்பர் 24 ஆம் தேதி உத்தரப் பிரதேசம், பரேலியில் கூகுள் மேப் வழிகாட்டிய பாதையில் சென்று பாதி கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+