ஹரித்துவார் கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதி... 4 தீவிரவாதிகள் சிக்கினர்!

Subscribe to Oneindia Tamil

ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரித்துவார் அருகே ரூர்கியில் அக்லாக் என்ற சந்தேக நபர் முதலில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் டேராடூன் அருகே மங்களூரில் பதுங்கியிருந்த மேலும் 3 பேர் சிக்கினர்.

haridwarterror

இவர்கள் அனைவரும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இந்த 4 பேரும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்றும் வரும் ஆர்த் கும்பமேளாவை சீர்குலைக்கும் நோக்கத்தில் சதித் திட்டத்துடன் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

ஹரித்துவாரில் நடைபெறும் ஆர்த் கும்பமேளாவில் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடுவதற்காக நாள்தோறும் பல லட்சம் பேர் திரள்வர். கடந்த ஜனவரி 1-ந் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா ஏப்ரல் 30-ந் தேதி நிறைவடைய உள்ளது.

இதனிடையே ஹரியானாவிலும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய 2 பேர் பிடிபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+