கலப்பு திருமணம் குற்றமா? இளம்பெண்ணின் குடும்பத்தினர் 40 பேருக்கு கொடுத்த தண்டனையை பாருங்க
புவனேஸ்வர்: ஒடிசாவில் பெண் ஒருவர் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினரை ஊர்மக்கள் ஒதுக்கி வைத்ததோடு, அந்த பெண்ணின் குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டையடித்த சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசாவின் ராயகடா மாவட்டம் காசிபூர் பிளாக் பைகனகுடா கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். இவர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

இளம்பெண் சார்ந்த சமுதாயத்தை பொறுத்தவரை மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்யக்கூடாது என்று பெரியவர்கள் வகுத்து வைத்துள்ளனர். ஆனால் அந்த இளம்பெண் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை விரும்பினார்.
அதுமட்டுமின்றி அந்த இளம்பெண் கலப்பு திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக தனது காதலனிடம் வாழ்ந்தால் இருவரும் சேர்ந்து தான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றாக சாக வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து காதலன், இளம்பெண்ணை திருமணம் செய்தார். மேலும் அவர்கள் 2 பேரும் வேறு கிராமத்துக்கு சென்றுவிட்டனர்.
இதுபற்றி இளம்பெண்ணின் குடும்பம் மற்றும் கிராமத்தினருக்கு தகவல் தெரிந்தது. கிராமத்தினர் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் மீது கடும் கோபம் கொண்டனர். அதுமட்டுமின்றி இளம்பெண்ணின் குடும்பத்திரை ஊரை விட்டு ஒதுக்கியும் வைத்தனர். அதன்பிறகு ஒருவழியாக கிராமத்தினர் மனம் இறங்கி வந்தனர்.
கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை அழைத்து அனைவரும் மொட்டையடித்து கொள்ள வேண்டும். மொட்டையடித்தால் தான் கலப்பு திருமணம் செய்த பெண்ணின் பாவம் நீங்கும். மொட்டையடித்தால் மட்டும் தான் கிராமத்தில் மீண்டும் சேர்ப்போம். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் கிராமத்தை விட்டு ஒதுங்கியே வாழ வேண்டும் என்று எச்சரித்தனர்.
இதனால் வேறு வழியின்றி அந்த பெண்ணின் குடும்பத்தினர் மொட்டையடிக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்துஅவர்கள் கிராமத்து கோவிலில் கால்நடையை பலி கொடுத்து பூஜை செய்தனர். அதன்பிறகு காதல் திருமணம் செய்த இளம்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 40 பேர் மொட்டையடித்து கொண்டனர். அதன்பிறகு பாவம் நீங்கியதாக கூறி அவர்களை குளித்துவிட்டு கிராமத்துக்குள் அனுமதித்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் வயலில் வரிசையாக இளம்பெண்ணின் குடும்பத்தினரை அமர வைத்து மொட்டையடிப்பது இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக காசிப்பூர் பிளாக் வளர்ச்சி அதிகாரி விஜய் சோய் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கிராமத்துக்கு சென்று அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications