நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் சதிகார 40 எம்.பி.க்கள்: காங். மீது பிரதமர் மோடி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: நாட்டின் முன்னேற்றத் தடுக்க நாடாளுமன்றத்தில் 40 காங்கிரஸ் எம்.பி.க்கள் சதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தாக்கியுள்ளார்.

பஞ்சாப், ஹரியானா மாநில தலைநகரான சண்டிகர் நகரில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

மக்கள் மன்றமே பெரிது

மக்கள் மன்றமே பெரிது

தேர்தல் மூலமாக மக்கள் அளித்த பெருவாரியான தீர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் லோக்சபாவில் அரசின் குரல் முடக்கப்படுகிறது. இதனால்தான் மக்கள் மன்றத்தில் மனக்குமுறலை தெரிவிக்கிறேன்.

40 சதிகார எம்.பி.க்கள்

40 சதிகார எம்.பி.க்கள்

ஜனநாயகத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. சிலர் அடாவடித்தனமாக நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர்.

400 எம்.பி.க்கள் ஆதரிக்கும் திட்டங்களை எல்லாம் எதிர்ப்பதன் மூலமாக 40 காங்கிரஸ் எம்.பி.க்கள் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க சதி செய்து வருகின்றனர்.

கேளுங்க...பேசுங்க..

கேளுங்க...பேசுங்க..

நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புங்கள். பிரச்சனைகள் தொடர்பாக விவாதம் நடத்துங்கள். நாடாளுமன்றத்தை சுமுகமாக செயல்பட அனுமதியுங்கள்.

மன்னிப்பே கிடையாது...

மன்னிப்பே கிடையாது...

வாக்களித்த மக்கள், தங்களது எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதைவிட துரதிர்ஷ்டவசமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் இப்படி நடந்துகொள்ளும் இந்த எம்.பி.க்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+