மம்தா பானர்ஜி தொகுதியில் ஷாக்.. ‛சார்' வழியாக 21.7% வாக்காளர்கள் நீக்கம்.. மொத்தம் இத்தனை ஆயிரம் பேரா? அம்மாடியோ
கொல்கத்தா: நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சொந்த தொகுதியின் பாவனிப்பூரில் மட்டும் 21.7 சதவீத வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 2 தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். நந்திகிராம் மற்றும் பாவனிபூர் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார்.

இதில் நந்தி கிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் மம்தா பானர்ஜியின் கட்சி சார்பில் எம்எல்ஏவாக இருந்த சுவேந்திர அதிகாரி பாஜக சார்பில் போட்டியிட்டார். அவரை வீழ்த்த மம்தா பானர்ஜி களமிறங்கினார். ஆனால் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி 1 லட்சத்து 10 ஆயிரத்து 764 ஓட்டுகள் பெற்ற நிலையில் மம்தா பானர்ஜி, 1 லட்சத்து 8 ஆயிரத்து 808 ஓட்டுகள் வாங்கி 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். அதேவேளையில் பாவனிபூர் சட்டசபை தொகுதியில் மம்தா பானர்ஜி 85,263 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26,428 ஓட்டுகள் மட்டுமே பெற்ற நிலையில் மம்தா பானர்ஜி 58,835 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழகத்தை போல் அடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்தது. நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக உள்ள பாவனிபூர் சட்டசபை தொகுதியில் மட்டும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 21.7 சதவீதம் பேரின் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது மொத்தம் 44,787 வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரி மாதம் இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 295 என்ற அளவில் இருந்தது. தற்போது ‛சார்' நடவடிக்கைக்கு பிறகு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 509 ஆக சரிந்துள்ளது.
இந்த தொகுதி மம்தா பானர்ஜியின் கோட்டையாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வென்று தான் முதல் முறையாக மம்தா பானர்ஜி முதல்வர் ஆனார். அதன்பிறகு 2016 சட்டசபை தேர்தலிலும் மம்தா பானர்ஜி இங்கு தான் வாகை சூடினார்.
இப்போது 2021 சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்ற நிலையில் பாவனிபூர் தான் அவருக்கு கைக்கொடுத்தது. இதனால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலிலும் மம்தா பானர்ஜி இங்கு தான் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் பாவனிபூர் சட்டசபை தொகுதியில் இருந்து 44,787 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
-
“மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை.. தேர்தல் ஆணையத்தின் செயல் சரியில்லை” - மம்தா பானர்ஜி -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications