For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

24 வயது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்: 44 வயது பெண் போலீசில் புகார்

24 வயது கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக 44 வயது ஜெர்மனி பெண் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: 24 வயது கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக 44 வயது ஜெர்மனி பெண் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஜெர்மனியை சேர்ந்த 44 வயது பெண் மார்தா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஃபேஸ்புக் மூலம் பஞ்சாபை சேர்ந்த 24 வயது வாலிபரை காதலித்துள்ளார்.

44-year-old German woman alleges rape by her 24-year-old Indian husband

இதையடுத்து அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மார்தா தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் பஞ்சாபில் வசிக்கத் துவங்கினார்.

ஜெர்மனியில் செட்டிலாக மார்தாவும், கணவரும் முடிவு செய்தனர். இந்நிலையில் டெல்லி வந்த மார்தா பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் மாமனார் மீது புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

பஞ்சாபில் வைத்து என் கணவர் என்னை பலாத்காரம் செய்தார். அவரின் தந்தை எனக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். திருமணத்திற்கு பிறகு என்னை மோசமாக நடத்தினார்கள் என்றார்.

அவரின் புகாரின்பேரில் போலீசார் 24 வயது வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

English summary
A German woman has alleged that her Indian husband, whom she had befriended on social networking website Facebook, raped her during the couple’s stay in Punjab, police said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X