அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 49 பேர் குற்றவாளிகள்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அகமதாபாத்: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 49 பேர் குற்றவாளிகள் என குஜராத் சிறப்பு கோர்ட் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை நாளை(பிப்.,9) வழங்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் 2008 ஜூலை 26ல் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 70 நிமிடத்துக்குள் 21 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 56 பேர் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இதுகுறித்துஅகமதாபாத் போலீசார் 20 வழக்குகள் பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர்.
அடுத்த 2 நாளில் சூரத்தின் பல இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பயங்கரவாத அமைப்பு
2002ல் நடந்த கோத்ரா கலவரத்துக்கு பழிவாங்கும் வகையில் இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டி குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கு குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. குண்டுவெடிப்பு தொடர்பாக 77 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு தொடர்பாக 1100 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 26 பேர் முக்கிய சாட்சிகளாக எடுத்து கொள்ளப்பட்டனர்.

49 பேர் குற்றவாளிகள்
13 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் சிறப்பு நீதிபதி ஏ.ஆர்.பட்டீல் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது, சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால் 28 பேர் விடுதலை செய்வதாகவும், மற்ற 49 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான தண்டனை விபரம் நாளை (பிப்.,9) அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

வீடியோ கான்பரன்ஸ்
இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை பாதுகாப்பு காரணங்களுக்காக சபர்மதி சென்ட்ரல் சிறையில் நடத்தப்பட்டது. அதன்பிறகு வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு சிறைகளில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் ஆஜராகினர்.

சிறை வாரியாக
சிறை வாரியாக அகமதாபாத்தில் இருந்து 49 பேர், மத்திய பிரதேசத்தில் 10, மும்பையில் 4 , பெங்களூரில் 5, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பீகார் சிறைகளில் இருந்து தலா 2 பேர், ஆமதாபாத் அரசு மருத்துவமனையில் இருந்து ஒருவர் என மொத்தம் 77 பேர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications