நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு; பீகாரிலும் உணரப்பட்டது !
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. அந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பீகார் மாநிலத்தின் சில இடங்களிலும் உணரப்பட்டது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் இரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. முசாபர்நகர், சிதாமர்கி, பெடியாக் மற்றும் தர்பங்கா மாவட்டங்களிலும் உணரப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications