அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை...

Subscribe to Oneindia Tamil

கார் நிக்கோபார்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திங்கட்கிழமை இரவு 9.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியிருந்தது. அந்தமானை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

5.3-magnitude quake hits Andaman and Nicobar islands, no tsunami alert

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர்.

நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.

முன்னதாக நேற்று காலை 11.42 மணிக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நாகாவ்ன் என்ற இடத்தில் 2.4 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகியிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+