மைனர் சிறுமியை இரண்டாவதாக மணக்க திட்டம்.. ஜார்கண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை
ஜார்கண்டில் மைனர் சிறுமி ஒருவரை இரண்டாவது தாரமாக மணக்க அனுமதிதராத காரணத்தால் அந்த சிறுமியும், அவளது குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ராஞ்சி: ஜார்கண்டில் மைனர் சிறுமி ஒருவரை இரண்டாவது தாரமாக மணக்க அனுமதிதராத காரணத்தால் அந்த சிறுமியும், அவளது குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஜாம்ஷெட்புரை சேர்ந்த ராம் சிங், பானா குயி, ரம்பா, காந்தே, சோனியா ஆகியோர் இதில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் ரம்பாவை திருமணம் செய்து கொல்ல விருப்பப்பட்டு அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பெண் கேட்டு இருக்கிறார்.
அவருக்கு பெண் கொடுக்க ரம்பா குடும்பத்தினர் மறுத்துள்ளார். இதனால் தற்போது அந்த குடும்பம் மொத்தமாக கொடுரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மைனர் பெண்
அந்த குடும்பத்தில் இருக்கும் ரம்பா என்ற 17 வயது சிறுமியை கல்யாணம் செய்து கொள்ள, பெண் கேட்டு அதே அப்பகுதியை சேர்ந்த பெரிய நபர் ஒருவர் வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்கனேவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது. இதனால் ரம்பாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு பெண் தர மறுத்து இருக்கிறார்கள்.

கொலை செய்தார்கள்
இதனால் கோபமடைந்த அந்த நபர், தன்னுடன் 10 பேரை அழைத்து வந்து அந்த குடும்ப நபர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதில் அந்த குடும்பத்தில் ரம்பா உட்பட 5 பேரும் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் உடலை அங்கு இருக்கும் காட்டுப்பகுதியில் இரவோடு இரவாக புதைத்து இருக்கிறார்கள்.

மார்ச் 10ம் தேதி
இந்த கொலை சம்பவம் கடந்த மார்ச் 10ம் தேதி நடந்தாலும், அந்த ஊரில் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த காட்டுப்பகுதியில் வேலை செய்தவர்கள் 5 பேரின் உடலை கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்கள். அதன்பின் போலீஸ் விசாரணை செய்து கொலையாளிகளை கண்டுபிடித்துள்ளார்கள்.

10 பேர் கைது
இந்த கொடுர செயலை செய்த 10 நபர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த பத்து பேரும் மேல் சாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்பதாலும் போலீஸ் இன்னும் அவர்கள் பெயர்கள், விவரங்களில் வெளியிடவில்லை. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications