For Daily Alerts
Just In
பெங்களூருவில் ரூ. 4 கோடி கள்ளநோட்டு: 5 பேர் கைது
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழகத்தில் விட தயாராக இருந்த 5 பேரை அம்மாநில போலீசார் கைது செய்யதனர். அவர்களிடமிருந்து 4 கோடி ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு கே. ஆர் புரம் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் மதிப்புடைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்த நோட்டுகளை புழக்கத்தில் விட தயாராக இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English summary
Karnataka police on Friday arrested 5 men for allegedly circulating counterfeit currency.
Story first published: Saturday, February 8, 2014, 9:32 [IST]